Thursday, May 1, 2014

Narendra Modi vs. All in BJP


‘Modi vs. all’ shows up insecurities of rival camp: Amit Shah

பார்ப்பதற்கு, கொஞ்சம் நம்ப சந்தான பாரதி போல் இருக்கின்றார்.
ரொம்ப தெளிவு.
செயல் நல்லதோ, கெட்டதோ - தெளிவா இருக்கனும்.
அதுதான் இன்னைக்கு தேவை.

ஹிந்தி ஷோலே படத்திலே, அமிதாப் பச்சன் முக்கியம்;
தர்மேந்திரா முக்கியம்;
அம்ஜத்கான் முக்கியம்;
சஞ்சிவ் குமார் முக்கியம்.

எல்லோரும், நல்லது செய்ற ஹீரோவாக இருக்கணும் என்ற கட்டாயம் இல்லை.
கெட்டது செய்ற வில்லனாக இருந்தாலும் சரி.
ஆனா, குழப்பம் இல்லாம, தெளிவாக இருக்கணும்.

கிட்டத்தட்ட இரண்டு மாதமாக, நரேந்திர மோடியைப் பார்த்துகிட்டு இருக்கோம்.
ஆனா, அவரு நல்லவரா; கெட்டவரா;
ஒண்ணும் புரியலை.

அமித் ஷா. குழப்பமே இல்லை.
தெளிவு. மனசுலே தோணுங்கிறதை, தெளிவாக எடுத்து சொல்லும் திறன்.
தேர்தல் கமிஷன், அவரது பேச்சை தடை செய்தாலும்.
அந்தப் பேச்சில், ஒரு உண்மை இருந்தது.
எந்தவித போலித்தனமும் இல்லை.

வில்லனை; உண்மையாக இருக்கின்ற வில்லனை, நல்லவனாக ஆக்கிவிடலாம்.

ஆனா, குழப்பத்தில் இருக்கிறவனை, ஒண்ணும் பண்ண முடியாது.

சமீபத்தில், ரஜினிகாந்தும், விவேக்கும் பேசிக்கிட்டப்ப, ரொம்ப இயல்பாக, ஒரு மாபெரும் தத்துவத்தை, ரஜினி சொன்னாரு.

ஹீரோவும், வில்லனும் - ஒரே இலக்கைத்தான் அடைய விரும்புறாங்க;
ஆனா, எடுத்துக் கொள்கின்ற வழிதான், வேறு வேறாக இருக்கு.

நல்ல வழியில், டெல்லிக்கு சென்றால் - அவன் ஹீரோ; அல்லது அவள் ஹீரோயின்.
மக்களை ஏமாத்தி, குறுக்கு வழியில், டெல்லிக்கு சென்றால் - அவன் வில்லன்; அல்லது அவள் வில்லி.

ஆக, மனிதன் பிறக்கும்போது, குழந்தை.
நடுவிலே, ஹீரோ அல்லது வில்லன்.
பிறகு, கெட்ட பின்பு ஞானி.

நரேந்திர மோடி, இதுவரைக்கும், போலிஸ் ஸ்டேஷன்; கோர்ட்; ஜெயில்.
எதுவுமே போனதில்லையாம்.

இப்படி, எவனுமே இருக்க முடியாது.
அப்ப, நரேந்திர மோடி, தனது வாழ்க்கையை வாழவே இல்லை என்றே அர்த்தம்.

தப்பே பண்ணாத ஆளு, அரசியலுக்கே தகுதியில்லை.
அரசியல் மட்டும் அல்ல; எதுக்குமே தகுதியில்லை.

தப்பு பண்ணி இருந்திருக்கணும்;
கட்டாயம், காசு அடிச்சு இருக்கணும்;
தங்க நகைகளை, உடம்பு முழுவதும் போட்டு;
ஊர்வலம் வந்து;
பிறகு, தூக்கி எறிகின்றாளே,
அவள் தான்,
சக்தியாக உருவெடுக்கின்றாள்.

சிலர், இமயமலைக்கு சென்று, ஞானி ஆகின்றார்கள்.
சிலர், செண்ட்ரல் ஜெயிலுக்கு சென்று, ஞானி ஆகின்றார்கள்.

தப்பே பண்ணலை என்று, எவனாவது சொன்னால், அவன் ஒரு ஏமாத்துக்காரன்.

ஆக, நம்ப சந்தானபாரதி போல் இருக்கும் அமித் ஷாவை, சிறந்த தலைவனாக ஆக்கிடலாம்.
ஆனால், இந்த நரேந்திர மோடியை, யாரும், ஒண்ணும் பண்ண இயலாது.

யானைக்கும் அடி சறுக்கும்;
அப்படித்தான், சோ இராமசாமி, நரேந்திர மோடி விஷயத்தில் சறுக்கிட்டார்.

ஹிந்து பத்திரிக்கையில், வெளியாகி உள்ள இந்த இண்டர்வியூ, ரொம்ப சிறப்பாக இருக்கு.

சமீபத்தில், இவ்வளவு தெளிவாக, உண்மை பேசிய ஆளு, யாருமே இல்லை.

உண்மையிலேயே, அமித் ஷாவின் தலைமையில், குஜராத், எல்லா விதத்திலும் சிறப்பாக வளரும்.

நரேந்திர மோடியிடம், ஒரு வறட்டுத்தனம் இருந்தது.
அந்த வறட்டுத்தனம், குஜராத் மக்களைப் போட்டு, அமுக்கி, மன அழுத்தத்தை ஏற்படுத்தி விட்டது.

அந்த ஆளு, என்னங்க;
பொண்டாட்டிக்கு செஞ்ச துரோகத்தைகூட, நரேந்திர மோடியாலே உணரமுடியலை.
வாழ்க்கையிலே, ஒரு தப்பும் பண்ணலையாம்;
தப்பே பண்ணாம, வாழ்ந்தா; என்ன தங்க கிரீடமா வைக்கப் போறாங்க.

அமித் ஷா, பொண்டாட்டி புள்ளை; குடும்பம் என்று இருக்கின்றார்.

இன்றைய காலகட்டத்தில், எவன் ஒருவன், குடும்ப வாழ்க்கையில், தாக்குப் புடிக்கின்றானோ;
அவனால், நாட்டை சிறப்பாகவே, நடத்தி முன்னேற்ற முடியும்.

நரேந்திர மோடிக்கு, ஓய்வு தேவை.
வாயில் இருந்து பொண்டாட்டி பெயரை சொல்லியாச்சு;
அந்த பொண்டாட்டியோட, மீதமுள்ள காலத்தை வாழ்வதே சிறந்தது.

Now, BJP leaders make use of Amit Shah to convey the ground reality to Narendra Modi.

The summary of Amit Shah interview:
"Ask Not What BJP can do for you."
"Ask What You can do for BJP."

No comments:

Post a Comment